Wednesday 18 June 2014

Sandisk நிறுவனம் வெளியிட்ட உலகின் அதிக Capacity கொண்ட Micro SD Memory Card

Sandisk நிறுவனம் வெளியிட்ட உலகின் அதிக Capacity கொண்ட Micro SD Memory Card

ஆம் வெகு நாட்களுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்ற இந்த அதிக வகை Storage Device இனி இந்தியாவிலும் கிடைக்கும்
128Gb சேமிப்பு திறனை அடக்கி வைத்திருக்கும் இதில்
தொடர்ந்து 16 மணி நேரம் ஓடக்கூடிய HD Videoக்கள் மற்றும் 7,500 பாடல்கள் அதனுடன் 3,200 போட்டோக்கள் 125 சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில் பதிந்து வைத்து இயக்கலாமாம் !
அது மட்டும் இல்லாமல்
வெப்பம் மற்றும் தண்ணீரில் பாதிப்படையாத வாறு இதனை உருவாக்கியுள்ளார்களாம் இதனுடைய விலை 10,000 ரூபாயாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன் ஆனால் Sandisk எப்பவுமே குறைந்த விலையில் தான் memory cardகளை விற்கும் என இதனுடைய உண்மையான விலையை கண்டவுடன்தான் எனக்கே புரிந்தது
இதனுடைய இந்திய விலை ₹9,999 ரூபாய்தானாம்
(விலை ரெம்ப கம்மியாதா இருக்கு எல்லாரும் வேகமா போய் வாங்கிட்டு வாங்க)

'நமக்கு இந்த 8Gbயே போதும்டா சாமீ'

Tuesday 17 June 2014

அதிவேகம், பாதுகாப்பு கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் சாதனம்

அதிவேகம், பாதுகாப்பு கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் சாதனம்
தற்காலத்தில் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் மூலமானதரவுசேமிப்பு சேவை பிரபல்யமடைந்து வருகின்றது.
இச்சேவையினை Microsoft, Google, Dropbox போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

எனினும் இவற்றினால் வழங்கப்படும் சேவையை விடவும் 20 மடங்கு வேகம் அதிகம் உடையதும், பாதுகாப்பு உடையதுமான ஹோம் நெட்வேர்க் கிளவுட் ஸ்டோரேஜினை பெற்றுக்கொள்ளும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

Sherly எனும் இச்சாதனம் தற்போது மேம்படுத்தல் தேவைகளுக்கான நிதியினை பெறும்பொருட்டு Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெகுவிரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினியில் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க

கணினியில் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க
நாம் சில நேரங்களில் கணிணியில் சந்திக்கும் ஒரு பிரச்சனை சில கோப்புகளை அழிக்க(Delete) நாம் விரும்பி நாம் அழித்தால் அழியாமல் நமக்கு எரிச்சலை உண்டு பண்ணும. வேறொரு செயல் அந்த கோப்பை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக நமக்கு பிழை செய்தி வரும்.அதாவது கீழ்க்கண்டவாறு தோன்றும்
"Cannot Delete File: It is being used by another person or program"

இத்தகைய கோப்புகளை அழிக்க Unlocker என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் அழிக்க முடியாத கோப்பின் மீது Right கிளிக் செய்யவும்.அதில் Unlocker என்பதை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தால் அந்த கோப்பை தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் செயல்களை காட்டும்.

அதில் Unlock என்ற பட்டன் மூலம் அந்த செயல்களை நிறுத்தி அந்த கோப்பை அளிக்கலாம்.இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்.

http://www.brothersoft.com/download-unlocker-208761.html

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?

எச்சரிக்கை பொது இடங்களில் உள்ள கணினியை பயன்படுத்துபவரா நீங்கள்?


நீங்கள் கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப் யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போ ல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத் தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப் பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக்கொள்ள வேண் டாம். அந்தக் கம்ப்யூட்டரி ல் ஸ்பைவேர் அல்லது அட் வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலா ம். இவை திருட்டுத்தனமா க உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பண ம் பறிபோகும் வாய்ப்பு ண்டு.

2. உங்கள் நிதிசார்ந்த கணக்கு வழக்குகள் அல் லது வருமான வரி சம் பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அது போல பொதுக்கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்ல து நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப் பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசை க்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூல ம் எந்தப் பொருளையும் வாங்க க் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4.பொதுக் கம்ப்யூட்டர்களி ல் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன் டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரி ல் உள்ள பைல்களை அழி த்துவிடுங்கள். இன்டர்நெ ட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்து விடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்னவேலையும் பாது காப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய் திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரி யில் இருக்கும் பைல்களை அழித்து விடும்

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி
டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி.

அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் பெயரையும் சேர்த்து டைப் செய்தால் , நமது தேடலுக்கான அந்த இணையதள முடிவுகள் டக் டக் கோ பக்கத்திலேயே வந்து நிற்கும். இந்த வசதியை ஐபேங்! என்று டக் டக் கோ குறிப்பிடுகிறது. இதற்கும் ஒரு உதாரணம் பார்க்கலாம். தொழில்நுட்ப வலைப்பதிவான மேக்யூஸ் ஆப் ( இந்த வசதி பற்றி அறிமுகம் செய்த தளம்) தளத்தில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ( நடுநிலை!) பற்றிய கட்டுரைகளை தேட விரும்பினால், டக் டக் கோவில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு என டைப் செய்து கூடவே மேக்யூஸ் ஆப்! என குறிப்பிட்டால் போதும், இந்த தளத்தில் உள்ள தொடர்புடைய கட்டுரைகளை எல்லாம் பார்க்கலாம்.

இது போல நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பெயரை அடைப்புக்குறியிட்டு தேடும் வசதி இருக்கிறது. இணையதளங்கள் மட்டும் அல்ல, பல பொதுவான குறிச்சொற்களையும் இவ்வாறு தேடலாம். எடுத்துக்காட்டாக புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் குறிச்சொல்லுடன் இமேஜஸ் எனும் சொல்லை அடைப்புக்குறியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வசதிக்கான விரிவான பட்டியலையும் டக் டக் கோ கொடுத்துள்ளது:

https://duckduckgo.com/bang.html#menu

தெரிந்து கொள்வோம்:கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

தெரிந்து கொள்வோம்:
கணனியில் இருந்து வரும் பீப் ஒலி?

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.

6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்! 
info@eltf.in ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்! படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்....யாரவது ஒரு மாணவருக்கு / மாணவியருக்கோ இதன் மூலம் பயன் பெற்றால் கூட போதும் ! கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார். ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள். ( www.eltf.in ) இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவர்களே தேடிவந்து உதவிகள் செய்து தருகிறார்கள். கல்வி கற்க இனி என்ன கவலை !!

கம்பியூட்டரை வேகமாக இயக்க...!

கம்பியூட்டரை வேகமாக இயக்க...!

இன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்...

எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

விண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...!

விண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...!


தற்போது நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா?
அது திடீரென்று அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.
இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்;
அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.
விண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...!
இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.
ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.
மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

கம்பியூட்டரில் உள்ள சில டிரிக்ஸ் மற்றும் ஷார்ட்கட்ஸ்...!

கம்பியூட்டரில் உள்ள சில டிரிக்ஸ் மற்றும் ஷார்ட்கட்ஸ்...!
நாம் இன்று அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன.

அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும்Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.

* டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும்.இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும். ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் பி (Windows+P) கீகளை அழுத்தவும்.

* ஆட்டோ அப்டேட்
விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம்.
இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில், Windows Update திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Download updates but let me choose whether to install them என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா?அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம்.

* டச்பேட்
இது குறித்து சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ் என்ற சிறிய புரேகிராமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

* யு.எஸ்.பி.
யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது.பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardwareஉங்களுக்குத் தேவை இருக்காது.

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம்... இன்டர்நெட் தேவையில்லை......!!

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம்... இன்டர்நெட் தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில்
மாட்டிக்கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம். இனி அந்த நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும் (இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட மாட்டாது. நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.. இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.

How to UNLOCK USB dongle Internet Modem

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு usb Dongle இல் போட்டாஇன்டர்னெட்டை பையன் படுத்துவது எப்படி?( How to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card )
(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று
huawei Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது
ZTE டாங்களே எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/zte-unlock-code-calculator/ தளத்திற்கு சென்று
உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.
பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.
இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்

உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் Pendrive ல் உள்ளவற்றை இரகசியமாக Copy பண்ண வேண்டுமா?

உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் Pendrive ல் உள்ளவற்றை இரகசியமாக Copy பண்ண வேண்டுமா?

 உங்கள் நண்பர்களின் Pen Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே இலகுவாக திருடமுடியும். இதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.இம் மென்பொருளைத் தரவிறக்கிற்கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.
Download File

Friday 13 June 2014

Ear Phone வாங்குவதில் குழ்ப்பமா ? இனி தேவை இல்லை

Ear Phone வாங்குவதில் குழ்ப்பமா ? இனி தேவை இல்லை
மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் பாடல்கள் கேட்பதில் அலாதி பிரியம் இருக்கும் ஆனால் பாடல்களின் துள்ளியமான ஒலியை கேட்பதற்கு நம்மிடம் அதற்கு தகுந்த Ear Phone இருக்காது
.
.
சீன தயாரிப்பில் கடைகளில் விற்கப்படும் குறைந்த விலை உள்ள Ear Phone களை வாங்கி ஏமாறுவதை இன்னும் வழக்கமாக கொண்டிருக்கும் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்களுக்கான என்னுடைய பரிந்துரை 'Creative ep-600' எனும் Ear phone தான் .

Quality ?
.
.
இதில் பாடல்களை கேட்க அருமையாக இருக்கிறது இது நமது காதின் வடிவத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப் பட்டுள்ளது என்ற காரணத்தினால் வெளியில் எழும் எந்த சத்தமும் உங்கள் காதில் விழாது அப்படியென்றால் குறைந்த சத்ததில் பாடல்களை கேட்டாலும் மிக துள்ளியமான ஒலியை உங்களால் கேட்டு மகிழ முடியும்
விலை ?
.
.
இதனுடைய விலை நான் மூன்று மாதத்திற்கு முன்பு வாங்கும்பொழுது 450 ரூபாயாக இருந்தது இப்பொழுது எவ்வளவு என்பது தெரியவில்லை ஆனால் விலைக்கு ஏற்ற பொருள் என்பதை என்னால் உருதியாக கூற முடியும்
உத்திரவாதம் ??
.
.
ஒரு வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது
ஆகையால் இனிமேலும் போலிகளை வாங்கி ஏமாறாதீர்கள்

Thursday 12 June 2014

டூயல் சிம் மொபைலின் குறைபாடுகள்...

இந்திய சந்தைகளில் தற்போது விற்பனையாகும் 65 சதவீத செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடியதாகும். முதலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சைனா மொபைல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி வந்ததால், பிரபல நிறுவனங்களும் தங்களின் செல்போன்களில் டூயல்சிம் பயன்படுத்தும் முறையை கொண்டுவந்தன.
இதனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மக்கள் வாங்க தொடங்கினார்கள். ஆனால் இந்த வகை செல்போன்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது.
இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. டூயல் சிம் கார்டு மொபைல்களில், இரண்டு சிம்கார்டுகளும் இயங்கவேண்டிய நிலை இருப்பதால், பேட்டரி அதிகம் வீணாகிறது. இதனால் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்த முடியாது. இரண்டு சிம்கார்டுகளும் ஒரே நேரத்தில் இயங்குவதால் புராசசரின் வேகம் குறைகிறது. இதனால் செல்போன் ஹேங் ஆகும், பல சமயங்களில் செல்போன் அப்படியே அணைந்துவிடும். இதுபோன்று ஒவ்வொரு முறை நடக்கும் போது புராசசரின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக பதிப்படைகிறது. இறுதியில் நிறுவனங்கள் வழங்கு வாரண்டி காலமான ஒருவருடத்திற்கு பிறகு இந்த பிரச்னைகள் வெளிவருகிறது.
ஹேங்கிங் பிரச்னை சாதாரண செல்போன்களை காட்டிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் தான் அதிகம் ஏற்படுகிறது. காரணம் ஆன்டிராய்டு போன்களில், ஒரு அப்ளிகேஷனில் இருந்து வெளியேறினால் கூட அது திரைக்கு பின்னால் தொடர்ந்து செயல்பட்டில் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் போது ஓரிரு ஆண்டுகளில் செல்போன் முற்றிலுமாக செயலிழக்கிறது.
இதனால் தான் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை டுயல் சிம் செல்போன்களை தயாரிக்காமல் உள்ளது. எனவே டுயல் சிம் செல்போன்களை வாங்கும் முன்னர் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பது சிறந்தது.

Wednesday 11 June 2014

மொபைலை ரூட் செய்வது எப்படி ????? விடை இதோ !!!!


மொபைலை ரூட் செய்வது ஒன்றும் மலை ஏறுவதை போல கடினமான காரியம் இல்லை.

உங்கள் மொபைலை ரூட் செய்ய ஒரு கணினியை 5 நிமிடம் பயன் படுத்தினால் போதும் eroot என்னும் மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

usb மூலம் மொபைலை இணைங்கள் பின் eroot மென்பொருளைதிறங்கள் அதில் மொபைலின் மாடல் வரும்.

அதன் கீழ் Root என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் போதும்.

அடுத்து usb இணைப்பை துண்டித்து மொபைலை திறந்து பாருங்கள்.

அதில் superuser என்னும் ஆப் இருந்தால் உங்கள் மொபைல் ரூட் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.Download Here

facebook Apps Download




Facebook for Android Apk 10.0.0.0.21 ALPHA Download (Build 2348950)

இந்த versionil நிறைய bug சரி செய்ய பட்டு இருக்கின்றது

download Link

புதிய user interface
வேகமாக notification, chat , groups, pages browse செய்யலாம்



Google Maps Updates Include Routes To Avoid Crashes

 Google announced new Google Maps updates, including tailored maps and suggesting routes that reduce the likelihood of a crash, during the  ...